7
கீழக்கரையில் நேற்று (05/04/2020) இரவு மின்சாரம் தடங்கல் ஏற்பட்டது. பின்னர் சில பகுதிகளில் சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது. ஆனால் கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா எதிர்புறம் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் முக்கிய தளங்களுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று இரவு 10 மணியில் இருந்து காலை வரை மின்சாரம் இல்லாமல் குழந்தைகளும் பெரியவர்களும் நோயாளிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கொரனாவின் பீதியால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இவேலையில் சுமார் 20 மணி நேரமாக மின்சாரம் இல்லை என்பது மிகவும் வேதனையான விசயம் என்பதை மின்சார வாரியம் கருத்தில் கொண்டு உடனடியாக தீர்வு எண் வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
You must be logged in to post a comment.