Home செய்திகள் முதியோர் இல்லங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

முதியோர் இல்லங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

by mohan

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மதுரையில் மாநகராட்சி முதியோர் இல்லங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி வைத்தார்.அவர் கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கை முன்னிட்டு சுய தனிமை சூழலில் உள்ள நிலையில் மதுரை திருநகர் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு 25 கிலோ சாப்பாட்டு அரிசியும் சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களும் அவசர தேவை இருப்பதாக தகவல் வந்தது.இதனை தொடர்ந்து தன்னார்வலருக்கான அடையாள அட்டை வைத்துள்ள அசோக்குமாரை அழைத்து அவர் மூலமாக அந்தந்த முதியோர் இல்லங்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்தார்.இதனை பெற்றுக்கொண்ட முதியோர் இல்லத்தினர் தகுந்த நேரத்தில் உதவியதற்காக நிறுவனர் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!