உசிலம்பட்டியில் கொரோனா தடுப்பு மருந்தான கபசுர குடிநீரை தன்னார்வ இளைஞர்கள் அனைவருக்கும் இலவசமாக விநியோகம் செய்தனர்.இதனை உசிலம்பட்டி சந்தையில் கோட்டாச்சியர் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத்தடுக்க பல்வேறு முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்து எனக் கண்டறியப்பட்டு தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமணைகளிலும் பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இந்தக் கபசுர குடிநீர் இன்னும் வழங்கப்படாத நிலையில் இதனைப்பற்றி அறிந்த தன்னார்வ இளைஞர்கள் குழு கபசுர குடிநீரை தனது சொந்த செலவில் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். உசிலம்பட்டி கோட்டாச்சியர் மற்றும் அரசு மருத்துவர்களின் ஒப்புதலுடன் உசிலம்பட்டியில் 58 கிராம வட்டார இளைஞர் குழு சார்பில் சௌந்திரபாண்டி தலைமையில் இளைஞர் குழு முதற்கட்டமாக காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள்; மற்றும் தற்போது அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் விற்பனை செய்பவர்கள், காய்கறி வாங்கவருபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினர். உசிலம்பட்டி காய்கறி சந்தையில் வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.இதில் அவர் தானும் கபசுர குடிநீரை குடித்து விட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட கபசுப குடிநீர் பற்றி அறிந்த மக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பருகினர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.