உலகமே கோரோனா அச்சத்தால் உள்ள நிலையில் இந்தியாவையும் கோரோனா விட்டுவைக்க வில்லை. இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும் காரணத்தினால். பொது மக்களின் குறிப்பாக தினக்கூலி மக்களின் அன்றாட வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.
அதை கருத்தில் கொண்டு “காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் வானத்தை போல் உயர்ந்து நிற்க்கும்” என்ற குரல் தத்துவத்திற்கு ஏற்ப கீழக்கரையில் ராயல் புரோட்டர்ஸ் நிறுவனத்தினர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான். கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இப்ராஹிம், இன்ஜினியர் கபீர், மாசா சங்கத்தின் சேர்மன் இப்திகார் ஹாசன் ஆகியோர் உதவியோடு கீழக்கரை பகுதிகளில் ஜாதி, மதம் தாண்டி அன்றாட தேவைகளுக்கு சிரம்ப்படும் குடும்பகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, ஆயில் பக்கெட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்
கீழை நியூஸுக்காக..
SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.