நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் இஸ்லாமிய சகோதரர்களால் வீடுவீடாக உணவு பொருட்கள் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்தியா முழுதும் 144 தடை உத்தரவின் காரணமாக, குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில், கிராமங்களில் வெளியே நடமாட முடியாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சுமார் 100 வீடுகள் உள்ளது.

இவா்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து ரூபாய் 1 லட்சம் பண உதவி புரிந்து, இங்கே உள்ள நண்பர்களால் அரிசி 5 கிலோ, சமையல் எண்ணெய் 500ml, துவரை 500gm ,மளிகை பொருட்கள், காய்கறிகள், வாகனம் மூலம் வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..