கோரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதைத் தொடர்ந்து இன்று (31/03/2020) கீழக்கரையில் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் கீழக்கரை நகர் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தி அங்கு உள்ள பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் முககவசம் (Face Mask) வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கீழக்கரை சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா நகராட்சி ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசேன் மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தார்கள்.
கீழை நியூஸுக்காக
SKV சுஐபு
You must be logged in to post a comment.