7
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் கொரானா வைரஸ் தொற்று பாதித்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு கடந்த சில நாட்களாக சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனோவுக்காக இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக மண்டபம் ஒன்றியம் கும்பரம் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் மனைவி கோகிலவாணி 61 என்பவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 9:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார், ஆனால் இன்று (31/03/2020) மாலை 5 மணி அளவில் கோகிலவாணி பரிதாபமாக இறந்தார்.
You must be logged in to post a comment.