இன்றுடன் 31 . 03 . 2020 ஓய்வு பெறும் அரசு மருத்துவர் – செவிலியர் – மருத்துவ தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இரண்டு மாத கால பணி நீட்டிப்பு ஒப்பந்த அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவு. :

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K . பழனிசாமி அறிக்கை – நாள் 31 . 3 . 2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் ( 30 . 3 . 2020 ) கலந்தாய்வு செய்த பின்னர் , இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி , கீழ்க்கண்ட உத்தரவினை பிறப்பிக்கின்றேன் : ” 31 . 3 . 2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர் , செலவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர் , தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் . ” உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது . பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . விழித்திருப்போம் , விலகியிருப்போம் , வீட்டிலேயே இருப்போம் , கொரோனாவை வெல்வோம் . K . பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..