17
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி, காடமங்களம், மாவிலங்கை, முத்துசெல்லையாபுரம், வெள்ளாங்குளம், திம்முநாதபுரம், துத்திநத்தம், வீரமச்சான்பட்டி, பம்மனேந்தல் கிராமங்களில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து சினிமா நடிகர் ஹாலோ கந்தசாமி, காத்தனேந்தல் பள்ளி ஆசிரியர் விஜயராம் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
IMG_0056கண்ட இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியூர், வெளிநாடுகளில், இருந்து வந்தோர் நாம் வசிக்கும் பகுதியில் தனித்து வைக்க வேண்டும், மனிதனை மனிதன் தொடுவது மூலம் பரவும் கொரானா பரவாமல் தடுக்க மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் தற்காத்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணம் தவிர்க்க வேண்டும். என பிரசாரத்தில் ஹலோ கந்தசாமி வலியுறுத்தினார்.
You must be logged in to post a comment.