Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை மாவட்டம் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..

மதுரை மாவட்டம் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..

by ஆசிரியர்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவாறு கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 830622 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2020 மாதத்திற்கான தகுதியான அளவு விலையில்லா அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்துப் பொருட்களும், ரூ.1000/- ரொக்கத்தொகையும் வரும் 2. 4 .2020 முதல் வழங்கப்பட உள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், நோய் தொற்றைத் தவிர்க்க வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்பட உள்ளது. மேற்படி டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் 1 . 4 . 2020 முதல் தங்கள் வீடுகளுக்கே வந்து நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைகளுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் .

பொதுமக்கள் செய்ய வேண்டியவை. அனைவருக்கும் நிவாரணத்தொகை மற்றும் விலைமில்லா அத்தியாவசிய பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும் என்பதால் மக்கள் பதட்டமில்லாமல் பொறுமை காத்து தங்கள் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் நியாயவிலைக்கடைக்குச் சென்று 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை பெற்று செல்ல வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன் பெறுவதற்கு நியாய விலைக்கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை .

2. பொதுமக்கள் குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு கடைக்கு வரும் முன்பும் நியாயவிலைக்கடைமில் பொருட்கள் பெறப்பட்ட பின்பும் கிருமி நாசினி மூலம் தங்களது கை மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டையினை சுத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

3.கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாக கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் அவர்களது வீடுகளுக்கே சென்று ரூ.1000/- மற்றும் நிவாரணப்பொருட்கள் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மூலம் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அனுமதி பெற்று வழங்கப்படும் . அவர்களது குடும்பத்தினர் வெளியில் வருவதை முற்றிலும் தவிக்க வேண்டும் .

4.பொதுமக்கள் வெளியில் வரும்போது தங்களது எஸ்மார்ட் குடும்ப அட்டை மற்றும் டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையில் உள்ள காவலர்களிடம் காட்ட வேண்டும். இல்லையேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் .

5. விலையில்லா குடிமைப்பொருள் மற்றும் நிவாரண தொகை பெற செல்லும் நேர்வில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் மட்டுமே நியாயவிலைக்கடைக்குச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!