சாலையோரம் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களை மீட்கும் முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனுமதியுடன் மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களை மீட்கும் முயற்சி இரண்டாவது நாளாக தொடர்கிறது .நியூ கிரியேஷன்ஸ் ட்ரஸ்ட், மற்றும் நேதாஜி ஆம்புலன்ஸ் டிரஸ்ட் இணைந்து மதுரையில் ஆதரவற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை சுற்றி திரியும் மீட்கப்பட்டு மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. உறுதுணையாக. நியூ கிரியேஷன்ஸ் ட்ரஸ்ட், Mrs குளோரி தேபோரா Mrs குளோரி தேபோரா மற்றும் நேதாஜி ஹரி ஆம்புலன்ஸ் உரிமையாளர்  ஹரி கிருஷ்ணன் மற்றும்  வாகன ஓட்டுனர் காவல்துறை இணைந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி முகாமுக்கு அழைத்து சென்றனர். இதுவரை சுமார் 8 பேரை மீட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரை மீட்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..