செங்கம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தண்டராம்பட்டு தாலுக்கா ரெட்டியார்பாளையம் பகுதியில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர் .அதற்கு முன்னரே இரண்டு வீடுகளும் எரிந்து சாம்பலாகின வீட்டின் பக்கத்தில் இருந்த தென்னை மரங்களும் எரிந்தது. இந்த தீ விபத்தில் தனபால் என்பவர் வீடு கட்டுவதற்காக ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ரொக்கப்பணம், வீட்டின் நகைகளும் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.