9
நாளை (17/03/2020) கீழக்கரை நகர் முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கடையடைப்பு நடைபெறும் என்று கீழக்கரை வர்த்தக சங்கம் அறிவித்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கடையடைப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டு நாளை கடை திறக்கப்படும் என்று வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு காரணமாக கூட்டமைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கொடுத்த அறிவிப்பு கூறப்படுகிறது. ஆனால் ஷாகின்பாக் என்று பல ஊர்களில் நடைபெறும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு தங்களை கட்டுபடுத்தாது, போராட்டம் தொடரும் என அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
கீழை நியூஸுக்காக..SKV சுஐபு
You must be logged in to post a comment.