8
கடந்த 3:03:2020 அன்று CAA, NRC, NPR, க்கு எதிராக தொடங்கிய கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போராட்டம் 10வது நாளாக இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. நேற்று 11.03.2020 எழுத்தாளர் மதிமாறன், சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், பெண்ணியப் போராளி சபரிமாலா, ஆகியோர். கருப்பு சட்டமான குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினர்..
குடியுரிமை சட்டத்திருத்தம் அனைத்து மத மக்களுக்கும் மிக மோசமானது எனவே இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் உடனடியாக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் சுமார் 2500 க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள்.
கீழை நியுஸ்காக கீழக்கரையிலிருந்து S.K.V சுஐபு
You must be logged in to post a comment.