கீழக்கரையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வாகன உரிமையாளர்களிடம் காவல் நிலையத்தில் ஆலோசனை..

இன்று 10.03.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை 8 மணி முதல் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்கள், பயனாளிகள் செல்லும் பேருந்துகள், காய்கறி மற்றும் பழ சரக்கை ஏற்றி வரும் லாரிகள் போன்றவைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையிலிருந்து வரும் ஆம்னி பஸ் மற்றும் மதுரையில் இருந்து வரும் காய்கறி பலசரக்கு லாரி உரிமையாளர்களுடன் கீழக்கரை சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் வாகன நெரிசலை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.

கீழை நியூஸ்காக கீழக்கரையிலிருந்து S.K.V சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..