மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நல்லமாயன் சுவாமி திருக்கோவிலை புரணமைப்பு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பால்க்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நல்லமாயன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
மேலதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த குடமுழுக்கு பூஜையில் முத்துப்பாண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி, நக்கலப்பட்டி, சடையாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.