செங்கம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வீராணம் வனப்பகுதியில் 50 பேர் கொண்ட கும்பல் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் ஈடுபட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது . அதனடிப்படையில் காவல்துறையினர் வீராணம் பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் 11 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தெரியவந்தது .11 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்தனர் அவர்களிடம் சீட்டுக்கட்டு ரூ. 41000/- ரொக்கம் மற்றும் 11 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர் காவல்துறையினர் கைது செய்து செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.