செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இளைஞர் வனத்துறையினரால் கைது..

செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இளைஞர் வனத்துறையினரால் கைது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடி வந்த மேல் பாச்சூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் வயது 27 பதினாறு நாட்டு வாய் வெடிகுண்டு துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. ரோந்து பணியின்போது செங்கம் வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறையினர் மேல்செங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . மேல்செங்கம் காவல்துறை இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..