8
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. ஒன்றிய பெருந்தலைவர் கே.டி. பிரபாகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா லூர்துமேரி முன்னிலை வகித்தார். 50 கிலோ எடை கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.தூய்மை பெண் காவலர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.விஜயகுமார், நந்திதா, மேலாளர் சாராள் உள்ளிட்ட ஒன்றிய அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மகளிர் அலுவலர்களுக்கு ஒன்றிய பெருந்தலைவர் கே.டி.பிரபாகரன் பரிசு பொருட்கள் வழங்கினார்.
You must be logged in to post a comment.