4
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2ம் தேதி குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் அருகே புதைத்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் அளித்த தகவலின் பேரில் செக்கானூரணி போலீசார் நடத்திய விசாரணையில் 30 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.