செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்..
செங்கம் பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செங்கம் காவல் துறையினர் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் கைது செய்தனர் .இரு கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையின் போது பஸ்டே கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்று தெரியவந்தது. பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் மக்கள் கூடும் இடத்தில் கேக் வெட்டி கொண்டாடுவது வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.