10
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 03:03:2020 மாலை 05:00 மணியளவில் வடக்குத்தெரு கொண்ட கருணை அப்பா பள்ளிவாசல் (மணல்மேடு) அருகில் பொது மக்கள் சுமார் 500க்கு மேற்பட்டோர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 75 நாட்களுக்கு மேலாக CAA, NRC, NPR க்கு எதிராக இந்தியா முழுவதும் பல பகுதிகளிலும் டெல்லியில் ஷாகின்பாக் போராட்டத்தை தொடர்ந்து, தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, வேலூர், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் போன்ற பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள், கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
கீழக்கரையில் இருந்து எஸ்.கே.வி.சுஹைபு
You must be logged in to post a comment.