5
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளம் இளைஞர்கள் மற்றும் நிலக்கோட்டை நகர் காவல்துறை இணைந்து நடத்தும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியும், மாரத்தான் ஓட்டப் போட்டியும் நிகழ்ச்சியை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்த ஓட்டப்பந்தயம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கி சுமார் 5 கிலோமீட்டர் என். ஊத்துப்பட்டி வரை நடைபெற்றது இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. நிலக் நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜ், நிலக்கோட்டை நகர அதிமுக நிர்வாகி கருப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா
You must be logged in to post a comment.