Home செய்திகள் உசிலம்பட்டியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமமுக ஆதரவு

உசிலம்பட்டியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமமுக ஆதரவு

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மூஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உசிலம்பட்டி மேலப்பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல் ஜமாஜ் மற்றும் எழுமலை . தொட்டப் பநாயக்கனூர் , உத்தப்ப நாயக்கனூர் பள்ளிவாசல் மூஸ்லீம் சமூகத்தினர் 100க்கும மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சி ஏ ஏ.,என் .ஆர் சி .என்.பி.ஆர்.சட்டத்தை எதிர்த்து மத்திய அரசையும், தமிழக அரசையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அமமுக சாா்பில் உசிலம்பட்டி நகர் கழக செயலாளர்  குணசேகரபாண்டியன் தலைமையில் அமமுக சார்பாகஇஸ்லாமியர்கள் CAA மற்றும் NRC க்கு எதிராக மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்இதில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!