மதுரை மாவட்டம் பேரையூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களிடமிருந்து 500 க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டார், மேலும் முன்னதாக பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து சுமார் 325 பயனாளிகளுக்கு 77 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா – வின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்டோருக்கு தையல் மிஷின் , கிரைண்டர், இஸ்திரி பெட்டி ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.