திருவண்ணாமலை மாவட்டம் சங்கம் ஒன்றியம், விண்ணவனூர்அரசினர் உயர் நிலைப்பள்ளியில், கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

திருவண்ணாமலை மாவட்டம் சங்கம் ஒன்றியம், விண்ணவனூர்அரசினர் உயர் நிலைப்பள்ளியில், கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

கூட்டத்திற்கு வின்னவனூர் பள்ளித் தலைமையாசிரியர் வண்டார்குழலி தலைமை தாங்கினார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார். மேல்பெண்ணாத்தூர் ஆயுர்வேத மருத்துவர் புனிதா கொரோனோ வைரஸ் பற்றி விரிவாகப் பேசினார் . பள்ளிகளில் மாணவர்கள் சுகாதாரத்தோடு இருக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க நோய்த்தடுப்பு முறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் விஜயா, ஜெயக்குமார் உட்பட மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..