தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக ஒரு நாள் கருத்தரங்கு..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக இன்று 22.02.2020 மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அமர்வுத் தலைவர்களை கௌரவித்து தொடக்கவுரையாற்றினார். கணிதத்துறை தலைவர் முனைவர் ஆர். புனிதா வரவேற்புரையாற்றினார். முனைவர் பங்கஜ ஸ்ரீவர்சவ பேராசிரியர் கணிதத்துறை அலகாபாத் மற்றும் முனைவர் லெல்லிஸ்திவாகர் பேராசிரியர் கணிதத்துறை தலைவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. அமர்வு தலைவர்களாக கலந்து கொண்டு மருத்துவத் துறையில் கணிதத்தின் பயன்பாடு பற்றி விளக்கி கூறினார்கள்.

கணிதத்துறை உதவி பேராசிரியர் திருமதி ஆர்.ராஜேஸ்வரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..