பிரபல சந்தனக்கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் பாஜகவில் இணைந்தார்..!

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.ஜ.,வில் இணைந்தார்.வித்யா ராணி பேசுகையில், ”மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான், என் தந்தையின் எண்ணம். அவர் தவறான வழியை தேர்வு செய்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வில் இணைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..