கடையடைப்பு …வெறிச்சோடிய இராமநாதபுரம்..

இன்று 21:02:2020 இராமநாதபுரம் பகுதியில் உள்ள முக்கிய கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தின்கு ஆதரவளிக்கும் விதமாக ஒரு சில சிறு கடைகளை தவிர இராமநாதபுரத்தில் உள்ள மீன் மார்க்கெட்,  காய்கறி மார்க்கெட், கோழி மார்க்கெட் , பெரிய வணிக நிறுவனங்கள், நகை கடைகள், ஹோட்டல்கள், மெடிக்கல், ஜவுளி கடைகள், சிறு வியாபாரிகள் கடைகள் என அனேக வியாபாரிகள் கடைகளை அடைத்து CAA NRC NPR க்கு எதிராக போராடிய சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் அதற்கு செவி சாய்க்க மறுக்கும் மத்திய மாநில அரசை கண்டிக்கும் வண்ணம் ஒருநாள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

சிறப்பு செய்தியாளர்:- எஸ்.கே.வி.சுஹைபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..