9
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய் மொழி தினம் கொண்டாட்டம் இன்று (21/02/2020) மாலை 04.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிரா பானு கமால் தலைமையில் நடைப்பெற்றது. தாய் மொழியின் சிறப்பையும், தமிழின் சிறப்பையும் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் முனைவர். அ. இராஜசேகர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சேதுபதி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம் நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் இலக்கியத்தின் வழியாக வாழ்வியல் கூறுகளையும், தமிழின் சிறப்பையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.
You must be logged in to post a comment.