இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்:- தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கண்களில் காயம்..
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜேசுஅலங்காரம் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரது படகில் ஆறு பேருடன் நேற்று இரவு 10 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜேசுஅலங்காரம் கண்ணில் காயம் பட்ட நிலையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். கீயூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேசுஅலங்காரம் மகன் டெரிமைஸ் தனது தந்தை நேற்று காலை கடலுக்கு சென்றதாகவும் இரவு 10 மணியளவில் நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தனது தந்தை கண்ணில் காயம் ஏற்பட்டு இரும்பு துகள்கள் கண்ணில் இருப்பதாகவும், கண் தெரியவில்லை எனவும், கண்ணிலிருந்து இரத்தம் வடிவதாகவும் கூறினார் மேலும் அரசு உரிய இழப்பீடும் , பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய படகின் உரிமையாளர் இரவு 10 மணியளவில் தங்களை நோக்கி வந்த இலங்கை கடற்படை தங்கள் வலைகளை அறுத்து துப்பாக்கியால் சுட்டதில் ஜேசுஅலங்காரம் கண்ணில் அடிபட்டு கண் பார்வை இழந்து அவர் மயங்கி விழுந்ததாகவும் அதன் பிறகு அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.