வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் சரஸ்வதியாகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் சரஸ்வதியாகம் நடைபெற்றது. வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கு சரஸ்வதியாகம் நடத்தப்பட்டு எழுதுகோல்கள் வழங்கப்படும். அதன்படி  சக்தி அம்மா தலைமையில் சரஸ்வதியாகம் நடந்தது. பிறகு எழுதுகோல்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு சக்தி அம்மா மாணவ – மாணவியர்களுக்கு எழுதுகோல் வழங்கினார்.விழாவில் முதன்மை மற்றும் வருவாய் துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் சண்முகசுந்தரம் , லண்டன் மருத்துவர் சஞ்சி பிரசாத் கனடா மருத்துவர் ரிச்சேர் தங்க கோவில் இயக்குநர் சுரேஷ் மேலாறூர் சம்பத் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..