Home செய்திகள் வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை .

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை .

by mohan

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்போது செயல்பட்டு வரும் புது பஸ் நிலையத்தை இடித்து விட்டு புது நவீன பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. இதன் மதிப்பீடு ரூபாய் 46 கோடியே 51 லட்சம். நவீன வசதிகளுடன் 2 ஆண்டுகளில் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று 12-ம் தேதி நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், கே.வி.குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் லோகநாதன் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமுவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.ஆனந்தன் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமை தாங்கி ஏழுமலை ஆவின் தலைவர் வேலழகன் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரகாஷ் முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளலார் ரமேஷ் மற்றும் கட்சியினர் அரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!