5
ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் அம்பலகாரத் தெரு ராமச்சந்திரன் மனைவி பஞ்சவர்ணம், 75. இவர் தனது வீட்டு வாசலில் மாலை 3:30 மணியளவில் நின்று கொண்ருந்தார். அப்போது, வட மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் 3 பேர் பழைய நகைகளை சுத்தம் செய்து, புதிய நகைகள் போல மாற்றித் தருவதாகக் கூறினர்.இதை நம்பிய பஞ்சவர்ணம் தனது 2 பவுன் சங்கிலியை அவர்களிடம் கொடுத்தார். அந்த சங்கிலியை சுத்தம் செய்வது போன்று நடித்த மூவரும், சங்கிலியுடன் தப்பிச் சென்ற னர். இது குறித்து பஞ்சவர்ணம் புகாரின்பேரில், மண்டபம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்றவர் 3 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.