காட்பாடி அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராமத் கில் ஜெய்பீம்நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர. இந்நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் சிறுவர் பூங்கா இடத்தை (புறம்போக்கு) ஆக்கிரமித்து 3 க்கும் மேற்பட்ட வீடுகள் 20 ஆண்டுகள் முன்பு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட முயன்று உள்ளனர். இதுகுறித்து காட்பாடி வட்டாச்சியர் பாலமுருகனுக்கு அப் Uகுதி இளைஞர்கள் புகார் மனு கொடுத்தனர்.வட்டாச்சியர் உத்தரவின் பேரில் காட்பாடிவருவாய் ஆய்வாளர் செந்தாமரை சேனூர் கிராம நிர்வாக அலுவலர் திலிப்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து முழு விவரத்தை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியரிடம் அளித்தார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..