பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆத்திகுளத்தில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் கொடுங்காயங்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 200 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..