விண்ணை முட்டும் கரும்புகை. நெருப்பை பற்ற வைக்கும் சைக்கோ மர்ம மனிதர்கள். கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அடிக்கடி நிகழும் இதுபோன்ற நிகழ்வு. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் அடிக்கடி குப்பைகளை தீவைத்து விட்டு தப்பித்து ஓடி விடுகிறார். இதனால் சுமார் 5 கிலோமீட்டர் அளவிற்கு குப்பைகள் எரிந்து புகை மண்டலம் விண்ணை எட்டும் வரைக்கும் தெரிகிறது. இந்த பதிவானது பைபாஸ் சாலையில் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தள்ளி உள்ள இந்த இடம் இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள் .இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறிய போது நாங்கள் இதுகுறித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்களை எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம் எனவும் மாநகராட்சி ஊழியர்கள் இதைப்பற்ற வைக்கவில்லை என்று உறுதி அளித்தார்கள் .அது தங்களுக்கும் தெரியும் எனவும் அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.