காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதிச்சியம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம் முதல்நிலை காவலர் செந்தில் குமார்  தற்போது அயல்பணியாக அரசு இராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு TN 59 AL 8727 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில், காவல் நிலையம் கொண்டு சென்று, CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORKS AND SYSTEMS ) இணைய தளம் மூலமாக மேற்கண்ட வாகன எண்ணை பதிவு செய்து பார்வையிட்டதில் E3-அண்ணாநகர் குற்ற பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது தெரியவந்தது.ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட முதல்நிலை காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்,  பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..