3
திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார் , இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும் தனி ஆர்வம் கொண்ட சிவக்குமார்.குளங்கள் அருகிலும் சாலை ஓரங்களிலும் 140 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 2 வருடமாக தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி ,பராமரித்து வருகிறார்.மேலும் சொந்த செலவில் மரகன்றுகளுக்கு தேவையான உரங்களை வாங்கி அதனை மரக் கன்றுகளுக்கு பயன்படுத்தியும் வருகிறார்.தனிநபராக மரங்களை பராமரித்து வரும் திரு.சிவக்குமார் அவர்களை அந்த ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.