மிகவும் மோசமான நிலையில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மிகுந்த அசுத்தம் துர்நாற்றம் உள்ளிட்ட பிற பயணிகள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .குறிப்பாக s2 கோச்சில் கழிவறையில் விளக்கு இல்லாமலும் குறைந்த அளவு நீரே வருகிறது. இதனால் இரவு நேர நெடுந்தூர பயணம் செய்வதால் பெண்கள் அச்சத்துடனே பயணிக்க நேருகிறது. இதை போக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு மிக மிக கேள்விக்குறியாகவே உள்ளது என சக பயணிகள் உடனடியாக இது குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழுதடைந்த ரயில் பெட்டிகளை புதிய பெட்டிகளாக பயணிகளுக்கு பயணம் செய்ய ஏற்றவாறு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மற்ற பெண்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..