மதுரை நேதாஜி ரோடு பகுதியில் அமைந்திருக்கும் அன்புச்செழியனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீரென அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்து அனைத்து கோப்புகளையும் ஆய்வு வருகின்றனர் ஆய்வின் முடிவில் தான் முக்கிய கோப்புகள் என்னென்ன இருக்கிறது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சொல்லமுடியும் என வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர் இந்த சோதனையானது நள்ளிரவு வரை தொடரும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் அலுவலகத்தில் திடீரென சோதனை நடைபெற்று வருவதால் மதுரையில் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் வியப்படைந்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.