சேலம் மாவட்டம் இடங்கணசாலையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கையெழுத்து இயக்கம்.! இடங்கணசாலையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதனை சேலம் மேற்கு மாவட்ட திமுக, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான காவேரி தலைமையில் கையெழுத்து இட்டு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் பச்சமுத்து, அன்பழகன், மாணிக்கம், நாகேந்திரன், செல்வம், மகேந்திரன், பாஸ்கர், பெரியசாமி, கந்தசாமி, அறிவழகன், முத்து, பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.