பேரையூர் அருகே சமத்துவபுரத்தில் சேதமடைந்து காணப்படும் நிழற்குடை .

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டியை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நிழற்குடை தகரத்தை கொண்டு அமைக்கப்பட்டதால் பலத்த காற்று வீசிய நிலையில் அந்த தகரம் பறந்து விட்டது. ஆனால் கடந்த 1 வருடமாகவே நிழற்குடை தகரம் இல்லாமல் ஓட்டையாக காட்சியளித்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பேருந்துகாக காத்திருக்க வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கோடை கால வெயில் வாட்ட தொடங்கியுள்ளதால் நிழற்குடையை சரி செய்ய அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..