6
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர், குளத்துப்பட்டி போன்ற கிராம பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் முருங்கையுடன் சேர்த்து விவசாயிகள் சென்டு பூக்களையும் ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் செய்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில் முருங்கையும் , சென்டு பூவும் நல்ல விளைச்சலைத் தருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஊடுபயிராக பயிரிட்டால் எந்த ஒரு பயிர்களுக்கு தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பட்சத்தில் ஒரு பயிருக்கு தண்ணீர் செல்லும்போது அந்த தண்ணீர் ஊடுபயிர் செடிக்கும் செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முருங்கை நல்ல விலைக்கும், சென்டு பூ குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.