சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு வானமாமலை நகர் ஆர் கே பஜாஜ் நிறுவனம் அருகே பாதாள சாக்கடை நீர் கடந்த 3 நாட்களாக சாலையில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை பலமுறை அதிகாரியிடம் சொல்லியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மேலும் அருகே மருத்துவமனையும் கோயிலும் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..