கீழை நீயூஸ் செய்தி எதிரொலி.. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி… வேண்டுகோளை ஏற்று மீண்டும் பணிக்கு சேர்த்த மதுரை மாநகராட்சி ஆணையர்…

மதுரை  மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் விசாகன், மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அவரே களத்தில் இறங்கி சரி செய்து வரக்கூடியவர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் சாரையோரங்களில் குப்பைகள் எறிக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்து.  அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன் அச்செயலில் ஈடுபட்ட ஊழியரையும் பணி நீக்கம் செய்துள்ளார்.

பின்னர் கீழை நியூஸ் மதுரை நிருபர் காளமேகத்தின் அந்த மாநகராட்சி ஊழியரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வைத்த வேண்டுகோளை ஏற்று பணிநீக்கம் செய்த ஊழியரை மீண்டும் நாளை (01/02/2020) முதல் பணியை தொடர ஆணை பிறப்பித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..