நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு கணவனும் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக தூக்கு போட்டு தற்கொலை பரபரப்பு.!

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு கணவனும் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக தூக்கு போட்டு தற்கொலை பரபரப்பு.!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அருகே நாட்டார்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் வயது (30) இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார் இவரது மனைவி பவித்ரா வயது (23)அக்கா மகளான இவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீரணன் திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வீரணன் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை என்றும் அடிக்கடி குடித்து விட்டு மது போதையில் வருவார் என்றும் கூறப்படுகிறது இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது அதில் பொறுமை இழந்து ஆத்திரமடைந்த பவித்ரா நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின் மனைவிக்கு அனைத்து வித இறு திசடங்குகளையும் செய்த வீரணன் மனைவி இறந்த துக்கம் மற்றும் அதிக கவலையால் புலம்பி கொண்டே இருந்துள்ளார் இந்நிலையில் அதிகாலையில் கழிப்பறை செல்வதாக கூறிய வீரணன் அருகில் இருந்த தோட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள வேப்பமரம் ஒன்றில் கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார் நீண்ட நேரமாக வராததால் உறவினர்கள் சந்தேகப்பட்டு தேடி சென்றனர் வீரணன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு உறவினர்கள் அதிற்சிபுற்றனர் முதல் நாள் தாயை இழந்து இரண்டாம் நாள் தந்தையும் இழந்த ஒன்றரை வயது குழந்தை இரண்டு நாளில் தாய் தந்தை இருவரையும் இழந்து தனிமரமானது அங்கு அனைவரையும் கலங்க வைத்தது. குடியினால் ஒரு குடும்பமே அழிந்து போனதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..