நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் 71-வது குடியரசு தினவிழா-மாநகராட்சி ஆணையர் தேசியக் கொடியேற்றி மரியாதை.!
இந்தியத் திருநாட்டின் 71 வது குடியரசு தின விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் 71-வது குடியரசு தினவிழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையாளர் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். அதை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி பேட்டை காமராஜ் மாநகராட்சி பள்ளி சார்பாக கலந்து கொண்ட மாணவர்கள் திருப்பூர் குமரன் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர். இந்நாடகம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. விழாவில் காமராஜ்பள்ளிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை அப்பள்ளி ஆசிரியர்கள் திரு .சீதாராமன் .திரு .சாமுவேல் .திரு .பொன்னுசாமி மற்றும் நாடகத்தில் நடித்த மாணவர்கள் ஆகியோரா மாநகராட்சி ஆணையாளரிடம் பெற்று கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.