5
பாகிஸ்தானில் ஏலியன்ஸ் வருகையா? வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு வளையம்-பீதியில் பொதுமக்கள்!!
வானில் திடீரென தோன்றிய கருப்பு வளையத்தால் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வானில் கருப்பு வளையம் தோன்றியது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்த கருப்பு வளையத்தை பார்த்த பொதுமக்கள் பலர், ஏலியன்கள் அதில் தான் வருவார்கள் என்று பீதியை கிளப்பியுள்ளார்கள்.
என்ன காரணத்துக்காக இத்தகைய வளையங்கள் தோன்றின என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதே போன்று சில மாதங்களுக்கு முன் கஜகஸ்தான் நாட்டிலும் கருப்பு வளையம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபற்றி விஞ்ஞானிகள் வெளிப்படையாக ஏதும் கூறவில்லை.
You must be logged in to post a comment.