Home செய்திகள் மதுரையில் பிரபல பஸ் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் ரூ . 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்

மதுரையில் பிரபல பஸ் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் ரூ . 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்

by mohan

மதுரையில் பஸ் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ . 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ஐவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . மதுரை மேலப்பொன்னகரம் ஏழாவது தெருவை சேர்ந்தவர் பஸ் உரிமையாளர் செந்தில் வேல் . இவர் கரூர் எஸ் . எஸ் . எஸ் . பைனான்ஸ் பங்குதாரர் . நிர்வாக பங்குதாரர் முருகேசனிடம் ரூ . 5 லட்சம் கடன் கேட்டார் . அவர் மகாலிங்கம் என்பவரிடம் 2017 மார்ச் மாதம் கொடுத்தனுப்பினார் . அவரிடம் பணத்தை பெற்று கையெழுத் திட்ட பூர்த்தி செய்யாத புரோநோட்டை செந்தில்வேல்  கொடுத்தார் . 2017 நவம்பரில் ரூ . 5 லட்சத்தை வட்டியுடன் செந்தில்வேல் திரும்ப வழங்கி மகாலிங்கத்திடம் புரோநோட்டை கேட்டார் . மறந்து வைத்து விட்டு வந்ததாக கூறினார் . இந்நிலையில் மகாலிங்கம் , மாரியப்பன் , கவுதம் , கார்த்திகேயன் ஆகியோர் பழைய புரோட்டை பயன்படுத்தி அசோக்குமார் என்ப வரிடம் ரூ . 10 லட்சம் கடன் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து பணத்தை கேட்டு செந்தில் வேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் . செந்தில் வேல் புகார்படி ஐவர் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!